Header image alt text

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இராணுவ ரக் வாகனம் மோதியதில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் ரக் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி 55 ஆம் கட்டை பகுதியி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், இலங்கை மாணவன் ஒருவனுக்கு வெளிநாட்டில் இருந்து பரீட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சென். பீற்றர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் அகலங்க பீரிஸ் என்ற நீச்சல் வீரரான குறித்த மாணவன், Read more

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு, விசாரணை அதிகாரிகளாக பட்டதாரிகள் 200 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என, ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அதிகாரிகள் 400 பேர் தேவைப்படுவதுடன், தற்போது 200 பேர் வரையே கடமையாற்றி வருகின்றனர்.

பெற்றோர் பெற்ற கடனுக்காக மகளைத் தாக்கிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் சிறுமியொருவர் மீது இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அச்சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடத்தனையில் வசித்துவரும் 11 வயதான மனோரஞ்சன் தமிழினி என்ற சிறுமி, மாலை நேர வகுப்பிற்கு சென்ற போது, சிறுமியின் பெற்றோருக்கு கடன் கொடுத்த பெண்ணொருவர் சிறுமியை மறித்து தாக்கியுள்ளார். Read more

யாழ்ப்பாணத்தில் பதிவாகும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் இதுவரையில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளனர்.

வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் வன்முறைகளுடன் நேரடியாக தொடர்பு படாதவர்களும் இருப்பதாகவும், பூரண விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.என்.என். தரஞ்சித் சிங் சந்து தலiமையில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கை – இந்தியாவின் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். Read more

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய பிரியதர்சினி புஷ்பராஜா என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இருந்து கொச்சின் நோக்கி பயணிக்க இருந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனிக்கிழமை மதியம் வரை அங்கு செல்ல உள்ள அனைத்து விமானங்களுமே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. கொச்சின் விமான நிலையத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் இவ்வாறு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 33 வயதுடைய தாயும் அவரது 4 வயது மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மகன் கிணற்றில் தவறி விழுந்ததால் அவரைக் காப்பாற்ற தாய் கிணற்றில் குதித்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

முல்லைத்தீவு ரூனெயளர் நாயாறு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் மேலும் 8 மீனவ படகுகளும் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு உதவி கடற்றொழில் விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு மீனவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். Read more