பத்திரிகை அறிக்கை
அன்பார்ந்த தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும்!
புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வெகுஜன அமைப்பான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது ஆண்டுநாள் எதிர்வரும் 18.09.2018 ஆகும்.
ஆயுதப் போராட்டத்தில் ஏற்படக்கூடிய தேக்க நிலையை ஈடுகட்டும் வகையிலும், பரந்துபட்ட அளவில் எமது மக்களின் அனைத்து பிரிவினரையும் விடுதலைப் போராட்டத்தின்பால் அணிதிரட்டக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்ட வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, இந்திய படைகளின் இருப்புக்கு மத்தியிலும், எமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக, வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பங்குபற்றலுடன் தனது முதலாவது வெகுஜன போராட்டத்தை நடாத்தியிருந்தது. Read more