(கே.குமணன்)-
சிங்கள அரசியல் தலைமைகள் மிகத் தெளிவான கொள்கையுடன் வடகிழக்கு தமிழ் மண்ணின் முழுமையாக குடிப்பரம்பலை மாற்றும் நேர்ககில் செயற்படுகின்றன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நேற்று மகாவலி திட்டத்தினூடான நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், நாடு சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் சிங்கள அரசியல் தலைமைகள் மிகத் தெளிவான கொள்கையுடன் வட கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை, முழுமையாக குடிப்பரம்பலை மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் அம்பாறையில் கல்ஓயா திட்டத்தில் ஆரம்பித்தது. Read more