யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தை மறுசீரமைத்து மீள இயக்கும் பணிகள் இன்றுமுற்பகல் 10.30மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் மீன்பிடி உற்பத்தியில் 30 சதவீதத்திற்கு மேல் மயிலிட்டி துறைமுகம் பங்களிப்பு செய்திருந்தது. இந்நிலையில், யுத்தம் காரணமாக செயழிலந்த இந்தத் துறைமுகத்தை மீளச் செயற்படுத்தும் பணிகள் 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் பாதீட்டிலிருந்து 40கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டு இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more