Header image alt text

கடந்த 09.06.2018 சனிக்கிழமை அன்று காலமான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலி.தெற்கு பிரதேச சபை அங்கத்தவர் திரு.இ.குமாரசாமி அவர்களின் பிரதேச சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு,

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு. இரத்தினசிங்கம் கெங்காதரன் அவர்கள் கடந்த 21.08.2018 செவ்வாய்க்கிழமை அன்று நியமிக்கப்பட்டுள்ளார். Read more

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தல் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை ஏதிலிகள் குடும்பம் ஒன்று, அங்கு தொடர்ந்தும் வசிப்பதற்கான தமது போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.

நடேசலிங்கம், பிரியா ஆகிய தம்பதியினர் கடந்த 2012ஆம், 2013ஆம் ஆண்டுகளில் படகுமூலம் தனித்தனியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், தங்குமிட விசாவை புதுப்பிக்காதமை காரணமாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர்கள், அந்நாட்டு குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Read more

யாழ்ப்பாணம் – நெல்லியடி மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 11 மோட்டார் குண்டுகள், காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த பகுதிகளில் மேற்கொண்ட தோண்டுதல் நடவடிக்கையில் இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்யும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளதுடன், கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளங்களில் நீரின்மையால் கால்நடைகள் அல்லற்படுகின்றன. இதேவேளை பச்சிளைப்பள்ளி பகுதியில் குழிகள் வெட்டப்பட்டு அதிலிருந்து பெறப்படும் நீரை கால்நடைகள் அருந்தி வருகின்றன.

இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மேம்பாட்டுக்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரிய முதலீட்டாளர்களின் சம்மேளனம் இந்த திட்டங்களில் ஒன்றிணைந்துள்ளது.

வர்த்தக மேம்பாட்டு தரப்பினரை கொண்ட குழு ஒன்றும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள கொரிய நாட்டு முதலீட்டாளர்களின் வலைப்பின்னல் ஒன்றையும் ஏற்படுத்துவது இதன் மற்றுமொரு நோக்கமாகும். Read more

வன்னியின் இறுதி மாமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ஆவது ஆண்டு வெற்றி நினைவு நாள் நிகழ்வு நேற்றுபிற்பகல் 2.30 மணியளவில் கற்சிலைமடு பண்டாரவன்னியன் நினைவுச்சிலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் அறங்காவற்கழக தலைவர் இசந்திரரூபன் (தம்பியன்) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில், மகாவலி அதிகாரசபையால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக, 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து, ‘மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை’ எனும் அமைப்பால், எதிர்வரும் 28ஆம் திகதி காலை தொடக்கம் முல்லைத்தீவில் பாரியளவிலான தொடர் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மகாவலி அதிகாரசபையால், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில், தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள பெம்பான்மையின மக்களுக்கு, காணி உத்தரவு பத்திரங்களை, மகாவலி அதிகார சபை வழங்கியுள்ளது. Read more

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக இந்த கைதி உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 50 வயதான பெண் கைதி ஒருவரே உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த பெண் சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்து – பசுபிக் பிராந்தியத்தின் பரந்துபட்ட பாதுகாப்பிற்கும் அபிவிருத்திகளுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய இரு நாடுகளும் முக்கியமானவையாகும்.

ஹோர்மூஸ் நீரிணையையும், மலாக்கா நீரிணையையும் இணைக்கும் முக்கியமான கப்பல் பாதையில் இரண்டு நாடுகளுமே அமைந்துள்ளமையானது அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். Read more