தமிழகத்தின் முன்னைநாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி இழப்பால் துயருற்றுள்ள கோடான கோடி தமிழ் மக்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்களுடன் நாமும் துயரினை பகிர்ந்துகொள்கிறோம்.
எமது விடுதலை போராட்டம் முளைவிட்ட காலம் தொட்டு எமக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய முக்கிய தலைவர்களில் கலைஞரும் ஒருவர். அன்று எம்மை வரவேற்று எமக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய குறிப்பாக தமிழகத்திற்கு ஏதிலிகளாக இடம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கல்வி மேம்பாட்டிற்கு நல்கிய உதவியை எம்மால் மறந்துவிட முடியாது. எமக்குள் ஏற்பட்ட சகோதர முரண்பாடுகளால் மனமுடைந்த கலைஞர் அவர்கள் இதனை கைவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுமாறு கோரியிருந்தவர். கலைஞரின் இவ் கருத்தை நாமும் கவனத்தில் கொண்டிருந்தால் ஈழத்தமிழினத்திற்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்காது என்பதும் வரலாறாகி சென்றுள்ளது.
Read more