Header image alt text

சிறைச்சாலைகளில் இருந்து போதைப்பொருள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறான கொலைமிரட்டல்களையும் மீறி சிறைச்சாலைகளை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரசதொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் யோசனைக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளமைக்கு அமைய,குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முப்பது பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது. Read more

வவுனியா – கோயில்குளம் பகுதியில் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் மீட்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கோயில்குளத்தைச் சேர்ந்த க.கதிர்செல்வன் (வயது 30)என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார். Read more

யாழ். மானிப்பாயில், இன்றுகாலை 6 கைக்குண்டுகளைக் கைப்பற்றியுள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் காணப்பட்ட கிணற்றில் இருந்தே, இக்கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள், விடுதலைப் புலிகளின் காலத்தில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத சிலர், தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

3 உந்துருளிகளில் சென்றிருந்த 6 பேர் கொண்ட குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவரின் வீட்டிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more

யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலை தடுக்கச் சென்ற 54 வயதான நடராஜா தேவராஜா என்ற வயோதிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு வாகனத்தின் மின் விளக்குகளை அணைக்காமல் சென்றதனால் இரு தரப்புக்கிடையில் முறுகல் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து முறுகல் நிலை மோதலாகியுள்ளது. Read more

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான மாட்டு வண்டி சவாரி சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த விளையாட்டு நிகழ்வு நேற்று கிளிநொச்சி பூநகரி நல்லூரில் அமைந்துள்ள சவாரி திடலில் இடம்பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 70 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த போட்டியில் பலரும் ஆர்வத்துடன் பங்கு கொண்டிருந்தனர். இந்த விளையாட்டினை பூநகரி சவாரி சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.