Header image alt text

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இவர்கள் பெற்றுக்கொள்ளும் கொடுப்பனவை விட, 215 சதவீத கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு அதிகரிப்பானது, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அமுலுக்குவருமெனவும் இந்த மாதம் நிலைவைத்தொகையுடன் கூடிய கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more

யாழ்ப்பாண கோட்டை, இராணுவத்தினர் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டப் பகுதி இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோதே அவர் நேற்று இதனை தெரிவித்துள்ளார். “யாழ்ப்பாண கோட்டையில் இராணுவம் பல தலைமுறைகளாக உள்ளது. இது முதல்முறையல்ல. இராணுவம் தொடர்ந்து அங்கு நிலைகொண்டிருக்கும். எனவே, இராணுவம் கோட்டையை கையகப்படுத்தியதாக கூறுவதில் உண்மையில்லை.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

திருகோணமலை கன்னியா காயத்திரி அம்மன் கோயில் வீதிக்கு பின்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கன்னியா காட்டுப்பகுதிக்குள் விறகு சேகரிக்க சென்ற நபர் ஒருவர், 119 என்ற காவல்துறை அவசர அழைப்பு இலக்கத்திற்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரத்தில் தொங்கிய நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Read more

இலங்கை வைத்திய சபையின் தலைவர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று சுகாதார அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வைத்திய சபையின் முன்னாள் தலைவர் காலோ பொன்சேகவின் பதவிக்காலம் முடிவடைந்து பிறகு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி அந்த பதவிக்கான பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டிருந்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் மக்கள் குடியரசுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு on arrival விசாவினை விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை லாவோஸ் மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி முதல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லாவோஸ் நாட்டு எல்லைக்கு வந்த பின்னர் on arrival விசாவுக்கு விண்ணப்பிக்கும் வசதி இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. Read more

சிறுவர் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகம் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த முறைப்பாடுகள் பதிவாகும் மாவட்டங்களில் கம்பஹா மாவட்டம் 2ஆவது இடத்திலும் 3ஆவது இடத்தில் குருநாகல் மாவட்டம் உள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார். சிறுவர் வன்முறை தொடர்பில் 2008 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் குறிப்பிடுகின்றது. Read more

வவுனியா புளியங்குளம் காவற்துறை பிரிவில் இடம்பெற்ற விபத்தில் அளவுக்கதிகமான பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை மாணவர் கடந்த தினத்தில் உயிரிழந்தார்.

புளியங்குளம் லைக்கா ஞானம் கிராமம் பகுதியிலிருந்து போக்குவரத்து வசதியின்மையால் இவ்வாறு அளவுக்கதிகமான மாணவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்தமை தெரியவந்தது. இந் நிலையில் தமது கிராமத்திற்கு பேரூந்து வசதிகள் இருக்கும் பட்சத்தில் தமது பிள்ளைகள் பாதுகாப்பாக பாடசாலை சென்று வர முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். Read more

அரசாங்க பேரூந்துகளில் வழங்கப்படும் பயணச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அட்டை முறையினை, இந்த வருட இறுதிக்கு முன்னர் அறிமுகப்படுத்த எதிர் பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டமானது, சில்லறை காசு பயன்பாடு மற்றும் மிகுதி பணம் கொடுக்கலின் போது ஏற்படும் சிக்கல் நிலையை போக்கும் வகையில், பயணிகளுக்கும் நடத்துனருக்கும் நன்மையளிக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ள பரந்தளவிலான வேலை நிறுத்தம் நாளை 08.00 மணி முதல் ஆரம்பமாகும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கம் நியாயமான தலையீடு செய்யாமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே இதனைக் கூறியுள்ளார். Read more

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆயிர்க்கணக்கான மீனவர்கள், மக்கள் என பலர் திரண்டு இன்றுகாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன்பாக ஆரம்பமான பேரணி, முல்லைத்தீவு பொதுச்சந்தை வழியாக நகரை சென்றடைந்து, அங்கிருந்து மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினை சென்றடைந்தது. அங்கே சென்ற மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியை தடைசெய்யுமாறு கோரி கோஷங்களை எழுப்பியதுடன் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் தம்மை சந்திக்க வேண்டும் என நீண்ட நேரமாக காத்திருந்தனர். Read more