Header image alt text

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்றுமாலை 6மணியளவில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அறிக்கை தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்குகள் ஏதும் அளிக்கப்படவில்லை.

குறித்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்தது. மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது, Read more

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி கூட்டு எதிர்க்கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் போன்று கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டிருந்தனர். பின்னர் குறித்த இடத்திற்கு வந்த தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோதிலும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

இராமாயணத்தை முன்னிலைப்படுத்தும் வகையிலான தொடருந்து சேவைத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, முதலாவது தொடருந்து சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி புதுடில்லியில் ஆரம்பமாகி, அயோத்தியில் முதலாவதாக தரித்து, பல பிரதேசங்களின் ஊடாக இராமேஸ்வரம் பயணிக்கவுள்ளது. Read more

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage கப்பல், இன்று (24), திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இது தொடர்பில், இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில், 900க்கும் அதிகமான அமெரிக்கக் கடற்படை வீரர்கள் அடங்குவதாக, தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக உலங்கு வானூர்தி சுற்றுலா சேவையானது, இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது, இன்று மட்டக்களப்பு விமான நிலையத்தில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எ.எம்.ஜவ்பர் தலைமையில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் உட்பட பலர் கலந்துகொண்டனர். Read more

ரயில் பணிப்பகிஷ்கரிப்பு மீண்டும் எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் என, ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்காமையின் காரணமாக, மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக, அச் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று, இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா – சாம்பல் தோட்டம் பகுதியில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சாம்பல் தோட்டம், ஐயப்பர் வீதியில் வசித்து வரும் 22 வயதுடைய வி.வித்தியா என்ற யுவதியே தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணிக்கு செல்வதற்கு குடும்பத்தாரிடம் அனுமதி கோரியுள்ளார். Read more

நாட்டில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் அநே­க­மானோர் காணாமல்போயுள்­ளனர். இவ்­வாறு காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்­கையை பரி­சீ­லிக்கும் போது ஆசி­யாவில் மாத்­தி­ர­மன்றி,

உல­க­ளா­விய ரீதி­யி­லேயே அதி­க­மானோர் காணாமல் போயுள்ள நாடாக இலங்கை உள்­ளது. முன்­னைய ஆணைக்­கு­ழுக்­களின் மூலம் பெறப்­பட்ட தர­வுகள் மற்றும் தற்­போது பெறப்­பட்­டுள்ள தர­வு­களின் அடிப்­ப­டையில் இரு­ப­தா­யி­ரத்­துக்கும் அதி­க­மானோர் காணாமல் போயுள்­ளனர் என்று காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரி­வித்தார்.
Read more