செஞ்சோலை படுகொலையின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2006 ஒகஸ்ட் 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 54 மாணவர்களும் 4 பணியாளர்களும் உயிரிழந்தனர்.
இந்த படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர். Read more