Header image alt text

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

நேற்று மாலை 7 மணியளவில் கிளிநொச்சிக்கு சென்றடைந்த பிரதமர், கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கு அருகில் உள்ள தும்பினி விகாரைக்குச் சென்று அங்கு விகாரபதியை சந்தித்து கலந்துரையாடியதோடு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

இரவு கிளிநொச்சியில் தங்கியிருந்த பிரதமர் இன்று மன்னார் மடுவுக்கு விஜயம் மேற்கொள்வாரென கூறப்படுகிறது.

சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கும் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்குமிடையில் தோன்றியுள்ள முறுகல்நிலை காரணமாக, 1184 சிறைக் காவலர்களுக்கான வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பதவிக்காக இணைத்துக்கொள்ளும் புள்ளி மட்டத்தை அதிகரிப்பதற்கு அமைச்சு கொண்டுவந்துள்ள தீர்மானத்தால், குறித்த பதவிக்காக தெரிவுசெய்யப்பட்ட 900 பேருக்கு அதிகமானோர் பதவி இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. Read more

இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பைக் காட்சிப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்களுக்குக் கோரிக்கை விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் சமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம், எதிர்வரும் 9ஆம் திகதி வரை குறித்த கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Read more

அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதென சங்கத்தின் மேல் மாகாண பிரதான அமைப்பாளர் யூ.கே குமாரரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.

புதிய அபராத பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். புதிய அபராத பத்திரம் மூலம் பேருந்து சாரதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more

யாழ். நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இருவரை நேற்று அதிகாலை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வைத்து கடந்த மே 7ஆம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அப்புத்துரை கிரிசன் என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்டும் 23 வயதான கிரிகேசன் காலில் வெட்டுப்பட்டும் படுகாயமடைந்தனர். Read more