நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து ஜனநாயக கட்டமைப்புக்குள் செயற்பட்டு வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹானா சிங்கர் அம்மையாரின் கவனத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுவந்துள்ளார்.

இந்தச் சந்திப்பு, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கவனத்துக்கு கொண்டுவந்தாரென, ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more