பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் இன்றுபகல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் 19ம் திகதிக்கு, நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்துள்ளார்.
இதன்படி பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது ஆசனத்தில் அமராமலே சபை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை விடுத்திருந்தார். Read more