Header image alt text

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் இன்றுபகல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் 19ம் திகதிக்கு, நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்துள்ளார். 

இதன்படி பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது ஆசனத்தில் அமராமலே சபை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை விடுத்திருந்தார். Read more

மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவி வகித்த முடியாது. எனவே அவர் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற சபை அமர்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபித்திருக்க வேண்டும். அது ஜனநாயக கடமை. அந்த கடமையை நிறைவேற்ற அவர் தவறினார். நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றியாவது அவர் பெரும்பான்மையை நிருபித்திருக்கலாம் அதனையும் அவர் செய்யவில்லை. Read more

கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டிருந்த கஜா புயல் நேற்றுமாலை 6.10 மணிமுதல் இன்று அதிகாலை வரை கடுமையாக வீசியதில் யாழ்.மாவட்டத்தில் ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 52 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 500 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. Read more

வடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. Read more