யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய புனரமைப்பு வேலைகள் தொடர்பாக மேற்படி சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கமைய
புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் சனசமூக நிலையத்திற்கு இன்று நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதோடு, பூமகள் சனசமூக நிலையப் புனரமைப்பு வேலைகளுக்கான நிதியினை அடுத்த பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின்மூலம் ஒதுக்கித் தருவதாக தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் செல்வராஜா, அகீபன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
Read more
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்றுமாலை 4மணியளவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றுகாலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு சூழ்நிலையிலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டுவரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.