வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்ளிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹட் சாலிஹீன் தெரிவித்தார்.
அதேபோல், மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் காங்சேன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை அசாதாரண வானிலை காரணமாக, வடமாகாணத்தில் 22 ஆயிரத்து 823 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்துள்ளார். Read more
பொது போக்குவரத்து பஸ் கட்டணைகளை, 4 சதவீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இந்த விலைக்குறைப்பு, 26ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றார்.
இலங்கைக்கு சட்டவிரோதமாக 30 கிலோகிராம் கஞ்சாவை கொண்டுவர முயற்சி செய்த இலங்கை பிரஜைகள் இருவர் உட்பட நால்வர் தமிழ்நாடு – மதுரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.