இலங்கை தொடர்பாக பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் அனுசரணையில் முன்வைக்கப்பட்ட புதிய பிரேரணை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை நேற்றைய தினம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதன்ரூ காரணமாக வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. மனித உரிமைகள், மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலை விரிவுப்படுத்தல் என்ற தலைப்பிலான இந்த பிரேரணையின் ஊடாக, 2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகால மேலதிக அவகாச காலத்தில், மனித உரிமைகள் பேரவையின் இரு அமர்வுகளில் இலங்கை குறித்த இரு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.