புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா தவசிகுளத்தில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத் (ஓஹான்)திற்கு இன்று (26.03.2018) ரூபாய் 20,000/- நிதியினூடாக விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. வி.ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்திற்கென வழங்கிய நிதியிலிருந்து நான்காம் கட்ட உதவியாக இது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் உப தலைவர்களுள் ஒருவரும், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் செயற்குழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் நந்தகுமார், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more
புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தரம் 8ல் கல்வி பயிலும் மாணவியான குமஸ்தகரன் சதுர்த்திகா என்ற மாணவிக்கு அவரது கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இன்று (26.03.2019) துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு கொண்டுவருவது தேசவிரோத செயற்பாடு என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான அவசியமோ, அவகாசமோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.