Header image alt text

வவுனியா – பெரிமடு பகுதியில் வைத்து சிறுவன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து குறித்த சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா – நெடுங்கேணி – பெரியமடு பகுதியில் வைத்து கடந்த 6ஆம் திகதி 8 வயதுடைய திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவன் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் கனகராயன்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றுமாலை தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. Read more

சர்வதேச மகளிர் தினம்-

Posted by plotenewseditor on 8 March 2019
Posted in செய்திகள் 

இன்று சர்வதேச மகளிர் தினமாகும். 1789ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர்.

ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் போன்ற விடயங்களை அவர்கள் வலியுறுத்தினர். Read more

வவுனியா குருமன்காடு அப்பிள் முன்பள்ளியின் வருடாந்த திறனாய்வு விளையாட்டு போட்டிகள் முன்பள்ளி அதிபர் விஜிதா தலைமையில் கடந்த 03.03.2019 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இவ் நிகழ்வில் வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், றோயல் லீட் பாடசாலையின் அதிபர் திருமதி கீதாஞ்சலி, புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எப்.பொன்சேகா, குமாரி பன்சி உரிமையாளர் திலக்சன் (பிரசாத்)ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள். Read more

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். Read more

வவுனியா, நெடுங்கேணிக் பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவர் நேற்றுமாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார். பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த சிறுவன் தனது தாயாருடன் வகுப்புக்கு சென்று வீடு திரும்பியிருந்தார். அதன்பின் தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக சென்றிருந்தார். Read more

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவரை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் இதற்கு முன்னர் தொழில் மற்றும் தொழற்சங்க அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியுள்ளார். அடுத்த வாரம் முதல் அவர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் கிணறு அமைப்பதற்கு குழி தோண்டும் போது அந்த குழியில் இருந்து மீட்கப்பட்ட மனித மண்டை ஒடு எலும்புக் கூடுகளை இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பொலிசாருக்கு நேற்று உத்தரவிட்டார்.

சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை (06) கிணறு அமைப்பதற்கு குழி தோண்டும் போது குழியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்றும் எலும்புககளும் வெளிவந்தன. Read more

சர்வதேச மகளிர் தினத்துக்கு அமைவாக இன்று முதல் 7அலுவலக தொடரூந்துகளில் பெண்களுக்கான பயணபெட்டிகள் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் வான் சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்கள் முகங்கொடுக்கும் சிரமங்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய காலை நேரங்களில் மீறிகம, ரம்புக்கணை, பொல்காவலை மற்றும் மஹவ ஆகிய தொடருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் அலுவலக தொடருந்துக்களில் மகளீருக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. Read more

அமெரிக்காவின் இணை அனுசரணையுடன் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை கோரும் பிரேரணை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரந்தமானதும், நிலையானதுமான நல்லிணக்க முறைமைமை நடைமுறைப்படுத்த இலங்கையினது பொறுப்புகூறல் மற்றும் கண்காணிப்பு என்பவற்றை தொடர்சியாக வெளிப்படுத்த 2015 ஒக்டோபர் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்ட 30/1 யோசனைக்கான காலத்தை நீடிப்பதற்கான பிரேரனை முன்வைக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று அதிகாலை தனங்களப்பில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் விசேட குற்றத் தடுப்பு பிரிவு அவரை கைது செய்துள்ளது. அவரிடமிருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தலைமறைவாகியிருந்த அவர் தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது. Read more