Header image alt text

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஒரு வார காலத்திற்குள் இடம்பெறும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதன் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கை வரவுள்ளன. கம்பெரா மற்றம் நியூகாசெல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மேலும் இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வரவுள்ளன. அவுஸ்திரேலியாவின் சுமார் 10 ஆயிரம் முப்படை வீரர்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளவுள்ளனர். Read more

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 15 March 2019
Posted in செய்திகள் 

துயர் பகிர்வோம்!

தமிழ் தகவல் நடுவம்(TIC) 1984ல் இந்தியாவின் தமிழகத்தில் சென்னை, மதுரை நகரங்களில் தனது காரியாலத்தை அமைத்து செயற்பட ஆரம்பித்த காலந்தொட்டு நண்பர் வை. வரதகுமார் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் எமது அமைப்பின் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனும் நானும் பெற்றிருந்தோம். தொடர்ந்து 1987 முதல் பிரித்தானியாவில் தமிழ் தகவல் நடுவம் செயற்படத் தொடங்கியதிலிருந்து இற்றைவரை இவருடனான எனது நட்பு தொடர்ந்தது.

எளிமையும் ஆழ்ந்த தமிழ் தேசியப்பற்றும் பழகுவதற்கு மிக இனிய சுபாவத்தையும் இயல்பாகவே தன்னகத்தே கொண்டிருந்த அவர் இலங்கையில் தமிழ் இனம் உரிமைகளை வென்றெடுத்து சுதந்திரமான ஒரு இனமாக வாழவேண்டுமென்பதில் வேணவா கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அதற்காகவே தனது சிந்தனையையும் செயலையும் ஒருமுகப்படுத்தி தன் வாழ்நாழில் பெரும்பகுதியை கழித்தார். சகல தமிழ் விடுதலை அமைப்புக்களுடனும் ஏற்றத்தாழ்வு பாராட்டாது தொடர்பினைப்பேணிய அவர், தமிழகத்தில் தமிழ் தகவல் நடுவத்தினை சகல தமிழ் அமைப்புக்களும் தங்களுக்குள் தொடர்புகளைப் பேணவும் சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளவும் ஒரு களமாக பயன்படுத்த வழியமைத்தார். விடுதலை அமைப்புக்கள் ஒற்றுமையாக இலக்கினை நோக்கி பயணிக்கவேண்டுமென்ற அவரது முயற்சி இறுதிமூச்சுவரை தொடர்ந்ததாகவே இருந்தது ஒரு துரதிஸ்டம்.  Read more

பாரம்பரிய பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்ளக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

மோசடியான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை தவிர்ப்பதே புதிய இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகத்தின் நோக்கமாகும். – அரச தகவல் திணைக்களம்

நாட்டின் நான்கு மாகாணங்களில் வாழும் பத்து லட்சம் பேரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்கென உலக வங்கி இலங்கைக்கு ஏழு கோடி அமெரிக்க டொலர்களை வழங்கியிருக்கிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருக்கிறது. வீதி அபிவிருத்தி சுகாதாரம் கழிவறை வசதிகள் என்பனவற்றை மேம்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புக்களும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவிருக்கின்றன. Read more

மூன்று நீதியரசர்கள் அடங்கிய இரண்டாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக இந்த நீதிமன்றத்தை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அதன்படி முதலாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. Read more

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உலகின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு திடீரென சிறிது நேரம் செயல்பாட்டினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழைய முடியாமல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகினர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பேஸ்புக் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். உங்களது காத்திருப்பிற்கு நன்றி’ எனும் குறுஞ்செய்தி அனைவருக்கும் கிடைத்துள்ளது. Read more

2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதமானது இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இவ்விவாதமானது குழுநிலையாக இடம்பெறவுள்ளதுடன், இன்று தொடக்கம் எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி வரை 19 நாள்களுக்கு இடம்பெறவுள்ளது.

மேலும் அன்றைய தினம் மூன்றாம் வாசிப்பு மீதானவாக்கெடுப்பு இடம்பெறும் என்பதுடன் இன்றைய தினம் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதமும் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை, மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று காலை 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் இவ்வாறு தனக்குத் தானே தீமூட்டி தற்கொலைமுயற்சியில் ஈடுபட்ட நபர் இனங்காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்புலன்ஸுக்கு அறிவித்து தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 76 வாக்குகள் அளிக்கப்பட்டன.

கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைந்தது. அதற்கமையை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததடன், மக்கள் விடுதலை எதிராக வாக்களித்திருந்தது. Read more

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு சம்பந்தமான மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபெசெகர முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி குறித்த மனுவை வாபஸ் பெறுவதாக நீதிமன்றில் தெரிவித்தார். Read more