லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

கடந்த வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) இடம்பெற்ற மேற்படி விபத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தல்லையப்புலத்தைச் சேர்ந்த பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.