இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன், பயங்கரவாத முறியடிப்பு பற்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுடன், பயங்கரவாத முறியடிப்பு குறித்து, பிரதமர் கலந்துரையாடியிருந்தார் என்றும் இலங்கைக்கு வருவது குறித்து அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையிலேயே, இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரும் அவர்,  இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்க பிரதானிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.