மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோர் மீது இனி வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து அவசரகால சட்டம் பிரகடணப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அவசரகால சட்டத்தின் கீழ், முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரை கைதுசெய்து வழக்கு தொடர முடியும் என சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா நீதிமன்றத்தை அவமதிப்பு குற்றச்சாட்டிற்காகவே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து, 11இளைஞர்கள் கடத்திக் காணாமலாக்கப்பட்ட விவகாரத்தை விசாரித்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரியான நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்யுமாறு,
குருநாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஷான் விஜயலால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் டடின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்கள், எழுத்துமூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, எம்.பி அத்துரலிய ரத்தன தேரர், அம்பியூலன்ஸ்ஸில், வைத்தியசாலைக்கு நேற்றுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் 9 பேரும், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ள நிலையில், இது தொடர்பான இராஜினாமா கடிதங்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.
ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை நேற்று இராஜினாமா செய்துள்ளனர்.