Header image alt text

மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோர் மீது இனி வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து அவசரகால சட்டம் பிரகடணப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அவசரகால சட்டத்தின் கீழ், முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரை கைதுசெய்து வழக்கு தொடர முடியும் என சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா நீதிமன்றத்தை அவமதிப்பு குற்றச்சாட்டிற்காகவே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மாரவில பகுதியை சேர்ந்த இந்திரசிறி சேனாரத்ன என்ற சட்டத்தரணியே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து, 11இளைஞர்கள் கடத்திக் காணாமலாக்கப்பட்ட விவகாரத்தை விசாரித்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரியான நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்யுமாறு,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால் முன்னிலையாகிய நிலையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குருநாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை, குருணாகல் மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளுக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  Read more

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஷான் விஜயலால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். தென் மாகாண  முன்னாள் முத​லமைச்சராக, ஷான் விஜயலால் இதற்கு முன்னர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் டடின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, பீட்டர் டடின் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more

பத்திரிகை அறிக்கை-

Posted by plotenewseditor on 4 June 2019
Posted in செய்திகள் 

பத்திரிகை அறிக்கை-

                        
முஸலிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டியேற்பட்ட சூழல் குறித்து கடுமையான அதிருப்தி- த.சித்தார்த்தன்,பா.உ.

நெருக்கடியான நேரத்தில் ஒற்றுமையாக செயற்பட்டு, இனத்தின் நன்மைக்காக எந்த தியாகத்தையூம் செய்வோம் என்பதை நிரூபித்துள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளை பாராட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகட்சியான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்,பா.உ. தெரிவித்துள்ளார். Read more

ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்கள், எழுத்துமூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, எம்.பி அத்துரலிய ரத்தன தேரர், அம்பியூலன்ஸ்ஸில், வைத்தியசாலைக்கு நேற்றுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆளுநர்களையும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனையும் பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி, நேற்றுடன் நான்கு நாள்களாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை, தேரர் முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்தே, அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 சமகால அரசாங்கத்தில் அங்கம் வ​கிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் 9 பேரும், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ள நிலையில்,  இது தொடர்பான இராஜினாமா கடிதங்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோரை, உடன் பதவி விலகுமாறு, நாடு முழுவதிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. Read more

ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை நேற்று இராஜினாமா செய்துள்ளனர்.

இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.