அமெரிக்காவின் அரசியல் – இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ஆர்.க்ளார்க் கூப்பர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களயத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் 7ம் திகதிவரை சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. Read more
முல்லைத்தீவு மாங்குளம் முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். சம்பவம் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி படைத்தளம் பகுதிக்கு அண்மையாக கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவும், இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்கின்றனர்.
புத்தளம் ஆனைமடு – சிலாபம் வீதியின் ரதஒலாஓயா பாலத்திற்கு அருகில் நேற்றுமாலை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை கண்டெடுத்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவை பாகிஸ்தானில் வர்த்தக தலைநகரான கராச்சிக்கான பயணத்தை இன்று மீண்டும் ஆரம்பிக்கவிருக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான இந்த விமான சேவை வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறுகின்றன.
சஹ்ரான் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மடிக்கணினி, 50 இலட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள் என்பவற்றை அம்பாறை பாலமுனை ஹூசைனியா நகர் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து, பொலிஸார் நேற்று (31) கைப்பற்றியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களை அடுத்து, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகளில் எஞ்சியிருந்தோர், இரண்டாவது கட்டாமக நேற்று முன்தினம் மாலை வவுனியா – பூந்தோட்ட நலன்புரி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.