Header image alt text

மன்னார், மாந்தை சந்தியில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு, மன்னார் பிரதேச சபையால் வழங்கப்பட்ட அனுமதி, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம். முஜாகிர் கையெழுத்திட்ட கடிதம், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Read more

கிளிநொச்சி கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றபோது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சிரேஸ்ட உறுப்பினரும், கட்சியின் மாவட்ட இணைப்பாளருமாகிய திரு. வே.சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் வைபவத்தில் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

மேற்படி நிகழ்வில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்தினர், ஊர்ப் பெரியார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி, சர்வமத குருமார்களால் நான்கு நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த மாவட்டங்களில் நிர்வாக முடக்கல் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சிரியா மற்றும் ஈராக்கில் செயற்பட்டு வருகின்ற ஐஎஸ் தீவிரவாதிளே திட்டமிட்டிருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரி கொக்கொஃப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு சபையின் 10வது சர்வதேச மாநாடு அண்மையில் இடம் பெற்றிருந்தது. இதில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த தாக்குதலானது பூகோள தீவிரவாதிகளுடைய திட்டமாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

அநுராதபுரம் – திருகோணமலை வீதியில் மொரவவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அமைச்சர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 08.00 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

இனி வரும் நாட்களில் நாடாளுமன்ற விசேடத் தெரிவுக்குழு முன்னிலையில் வழங்கப்படும் சில சாட்சிகளை இரகசியமான முறையில் பதிவு செய்ய விசேடத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

சில சாட்சியாளர்களின் பதிவுகளை ஊடகங்கள் இல்லாமல் பதிவு செய்யவும் சில சாட்சியாளர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

அம்பாறை – கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வரை தங்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர். Read more

இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் கூறியுள்ளது.

சம்பளப் பிரச்சினை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்ய புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்திருந்தது. புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோருக்கு இடையான சந்திப்பு இன்று காலை போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றிருந்தது. Read more

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும் பஸ்ஸ_ம் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பகுதியிலிருந்து பாடசாலை முடிவடைந்து மாணவர்களை ஏற்றியவாறு கோவில்குளம் சென்ற முச்சக்கரவண்டியும் சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸ_ம் கோவில்குளத்தில் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. Read more

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்புடன் பயணித்தல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். போம்பேயோயின் இலங்கைக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இம்முறை கொழும்புக்கு விஜயம் செய்ய முடியாமல் போவதையிட்டு செயலாளர் பொம்பேயோ தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more