மன்னார், மாந்தை சந்தியில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு, மன்னார் பிரதேச சபையால் வழங்கப்பட்ட அனுமதி, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம். முஜாகிர் கையெழுத்திட்ட கடிதம், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Read more
கிளிநொச்சி கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றபோது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சிரேஸ்ட உறுப்பினரும், கட்சியின் மாவட்ட இணைப்பாளருமாகிய திரு. வே.சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் வைபவத்தில் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சிரியா மற்றும் ஈராக்கில் செயற்பட்டு வருகின்ற ஐஎஸ் தீவிரவாதிளே திட்டமிட்டிருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரி கொக்கொஃப் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் – திருகோணமலை வீதியில் மொரவவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அமைச்சர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இனி வரும் நாட்களில் நாடாளுமன்ற விசேடத் தெரிவுக்குழு முன்னிலையில் வழங்கப்படும் சில சாட்சிகளை இரகசியமான முறையில் பதிவு செய்ய விசேடத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
அம்பாறை – கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் கூறியுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும் பஸ்ஸ_ம் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்புடன் பயணித்தல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். போம்பேயோயின் இலங்கைக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.