Header image alt text

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

போக்குவரத்து அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்காமையின் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோருக்கு இடையான சந்திப்பு இன்று காலை போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. Read more

குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அவர்களில் 601 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர் மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில், 639 கடிதங்களுடன் மே 2ஆம் திகதி கொழும்பு மத்திய தபால் திணைக்களத்தில் வைத்து சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். Read more

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து, அரசாங்கத்துக்கு அழுத்தம் தெரிவிக்கும் வகையில்,

அக்மீமன பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.கே. சுகத் உள்ளிட்டவர்கள் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அக்மீமன பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர். Read more

வவுனியா மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வரட்சியின் காரணமாக நீர்நிலைகளில் மீனினங்கள் இறந்து கரையொதுங்குகின்றமையை காணமுடிகின்றது.

இந்நிலையில், வவுனியா மூனாமடு குளத்தில் ஏராளமானளவில் மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். வவுனியா மாவட்ட பொதுசுகாதார அலுவலகத்துக்கு தகவல் வழங்கப்பட்ட போது, Read more

நாளை நள்ளிரவிலிருந்து இரு நாள்களுக்கு ரயில் பணிப்புறக்கணிப்பை முன்னெப்பதற்கு, 5 ரயில் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஓய்வூதியக் கொடுப்பனவு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து, இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ கே.கே. சச்சிதானந்தசிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்னம், சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் இந்த உணவுதவிர்ப்பு போராட்டத்தை நடத்துகின்றனர். Read more

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் டொக்டர் மொஹமட் சாஃபிக்கு எதிராக, இதுவரையில் ஆயிரத்து 3 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குருநாகல், தம்புளை வைத்தியசாலைகளிலேயே, இத்தனை முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மொக்டர் சாஃபி, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு, கர்ப்பத் தடுப்புக்கான சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த நிலையில், Read more

யாழ். கொக்குவில், மஞ்சவனப்பதி பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள் வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்களை நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் Read more