ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் குறித்த மனு இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. Read more
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்முறை தேர்தில் களமிறங்காவிட்டால் இலங்கையில் முதன் முறையாக பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் போட்டியிடாத முதலாவது தேர்தலாக அமையும் என்பது விஷேட அம்சமாகும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு திரும்புமாறு, ரயில்வே பொது முகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆராய்ந்தார். ஹெலிகொப்டர் மூலமாக மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சென்றிருந்தார்.
யாழ். தென்மராட்சி – மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
14 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றுப் பத்திரங்களை நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளித்தனர்.
கொழும்பில் உள்ள பல ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட பிரிவு ஒன்றை அமைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மட்டக்களப்பு, செங்கலடி – பதுளை நெடுஞ்சாலையில் முதிரையடி ஏற்றம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் பலியானதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.