இலங்கைக்கு மேலே தூசுத் துகள்கள் அதிகரித்தைமைக்கான காரணத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை கோரியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கே.எச்.முத்குடஆராய்ச்சி கூறுகையில், மேற்படி தூசுத் துகள்கள் எவ்வாறு நாட்டுக்குள் வந்துள்ளது என்பதை கண்டறியுமாறு வானிலை ஆராய்ச்சி மையம் எம்மிடம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. Read more
இலங்கையுடன் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் பெல்ஜியத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளின் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 3083 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சம்மி குமாரரத்ன உள்ளிட்ட எழுவருக்கு சட்டமா அதிபர் ஹோமாகம மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அதிகரித்துள்ளமையினால், சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் இணைந்து புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
கினிகத்தேன பொலிஸ் பிரிவில் பொல்பிட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Millennium Challenge Corporation உடன்படிக்கை தொடர்பில் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பாரிய அளவில் பரிமாறப்படும் முறையைக் கண்காணிப்பதற்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினால் முடிந்துள்ளது.