ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் பிரதமராக நியனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ மத அனுஷ்டான நிகழ்வுகளுடன் அலரிமாளிகையில் தனது கடமை பொறுப்புக்களை பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான உறுப்பினர்கள் 15 பேர் தமக்கான அமைச்சரவை நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டனர். Read more
இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கைக்கான சீன தூதுவர் ர்.நு. ஊhநபெ ஓரநலரயn சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு தவிர்ந்த ஆறு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.