தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி, வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்டோர் உறவினர்களால், இன்று (24) முற்பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர்கள், அங்கிருந்து பேரணியாக, அவர்கள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, சுவிஸ் உதவும் கரங்கள் அமைப்பின் அணுசரணையுடன் 70 மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருள்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.