இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கனேடியே உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் உயர்ஸ்தானிகர் கனடா அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களையும் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார். Read more
யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபராக மகேஷ் சேனாரத்ன பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகத்தில் இன்றையதினம் முற்பகல் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு 2 மில்லியன் டொலர்களை வழங்குவதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்முத் குரேஸி, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
கொழும்பிலுள்ள இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக வளாகத்தில் தாய் நாட்டுக்கான இராணுவம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஜித் பிரசன்ன உணவு தவிர்ப்பினை முன்னெடுத்துள்ளார்.
போலி வீசாவை சமர்ப்பித்து ஈரானிய எல்லைகளின் ஊடாக ஐரோப்பிய நாடான அல்பேனியாவிற்கு செல்ல முயன்ற இரண்டு இலங்கையர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையால் ஆறு பிரதேச செயலகங்களில் வசிக்கும் 1,050 குடும்பங்களைச் சேர்ந்த 3,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.