அண்மையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட 32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
01. எஸ்.எச். ஹரிஸ்சந்திர – நீர் வழங்கல் வசதிகள்.
02. பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க – நகர அபிவிருத்தி.
03. எஸ். சேனாநாயக்க – நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி. Read more
இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஸ்கேடாய் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜெனீவாவில் நான்கு நாள் அமர்வை இன்று நிறைவு செய்துள்ள உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனத்திற்கான அரச தரப்பினர்களின் கூட்டத்தின் போது (MSP)), 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக இலங்கை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பல வருடங்களாக செயல்பட்டு வரும் அரை சொகுசு பஸ் சேவையில், பயணிகளுக்கு எந்த வசதிகளும் வழங்காமலும், பணத்தை சுரண்டுவதுமே அதிகளவில் காணப்படுவதால், அதனை இரத்து செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
யாழ். வடமராட்சி துன்னாலைக் குடவத்தைப் பகுதியில் இரண்டரை வயதுச் சிறுவன் நேற்று இரவு 11.30 மணியளவில் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானமொன்றை செயற்படுத்துவதை தடுத்து விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை எதிர்வரும் மார்ச் 20ம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.