Header image alt text

வவுனியா, போகஸ்வௌ இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவ வீரர் ஒருவரை தாக்கி அவரின் துப்பாக்கியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் நேற்று முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மாதம் 09 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முற்பகல் ஆஜர் படுத்தப்பட்டனர். குறித்த இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். Read more

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா வயது (41) என தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த குடும்பஸ்தர் மனைவி பிள்ளைகளை பிறிந்து வாழ்ந்து வந்த நிலையில், உயிலங்குளம் சிறுநீலாசனை பகுதியில் தனிமையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். Read more

வடமாகாணத்தில் சட்டத்துக்கு புறம்பான முறையில் இடம்பெறும் மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் சாவகச்சேரியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சாவகச்சேரி பஸ் நிலையம் முன்பாக இன்று மாலை இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. கடந்த இரு வாரங்களாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சட்டத்துக்குப் புறம்பான மணல் அகழ்விற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. Read more

யாழ். தென்மராட்சி சம்பாவெளி கெற்பேலி ஸ்ரீ செம்பவலஞ்சுளிப்பிள்ளையார் தேவஸ்தான அறநெறி பாடசாலையில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றையதினம் (26.12.2019) காலை 11.00மணியளவில் அறிநெறிப் பாடசாலையின் தலைவி தபோதினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தென்மராட்சி பிரதேச சபையின் உப தவிசாளர் செ.மயூரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், திரு. தேவன் Read more

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதினைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. Read more

‘ஒரே நாடு, மூன்று மொழிகள்’ என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஒன்று சேர்த்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத, பிரிவினைவாதிகளை தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளதாவது, Read more

சுற்றுலாப் பயணிகள் நேரடியாக ரயில் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பயணச் சீட்டு விற்பனை செய்யும் நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

தனியார் சுற்றுலா நிறுவனங்கள் ரயில் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்து, அதிக விலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கங்கண சூரிய கிரகணம்-

Posted by plotenewseditor on 26 December 2019
Posted in செய்திகள் 

சுமார் 10 வருடங்களின் பின்னர், இலங்கையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் ´கங்கண சூரிய கிரகணம்´ ஏற்பட்டது. இன்று காலை 8.09 மணியில் இருந்து முற்பகல் 11.21 வரை இந்த சூரிய கிரகணம் ஏற்பட்டது.

குறித்த சூரிய கிரகணம் மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்திலும் தெளிவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சூரிய கிரகணத்தை பொது மக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆய்வுகளை வானியலாராய்ச்சி திணைக்களத்தின் ஆதர் சி கிளாக் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் ‘சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

யாழ். சாவகச்சேரி பேரூந்து தரிப்பிடத்தில் நாளைய தினம் (27-12-2019) மாலை மூன்று மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் நாடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.