Header image alt text

26 (4)யாழ். நல்லூரில் வைத்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்மீது கடந்த சனிக்கிழமை நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகள் இன்றுமாலை அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இடம்பெற்றன.

உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடலுக்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண நீதிபதிகள், வட மாகாண சட்டத்தரணிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதோடு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் சிலாபம் குமாரகட்டுவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read more

DSC00174மிகவும் வறுமைப்பட்ட, பாதிக்கப்பட்ட, கிராமத்திற்குள் செல்வதற்கே சீரான பாதைகளற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் புத்துவெட்டுவான் கிராமத்தின் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பழைய புத்துவெட்டுவான் அ.த.க.பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பாடசாலை சீருடை துணியும் 23.07.2017 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராசா அவர்களின் அனுசரணையில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புளொட் அமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர்களான மகேந்திரன் (ராஜா), வே.மணியம் மற்றும் வன்னி மேம்பட்டு பேரவையின் தலைவர் கனக தவராசா போன்ற பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
Read more

05யாழ்ப்பாணம் சங்குவேலி விநாயகர் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி நிகழ்வானது 22.07.2017 சனிக்கிழமை ஆசிரியர் தே.திருமுருகராஜன் (ஜே.பி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டிருந்ததோடு, விசேட அதிதிகளாக ஜி.எ.இசட் இணைப்பாளர் ஆ.சிவானந்தன், கிராம அலுவலர் ஆ.ரஜீவன், சமூக சேவகர் கெங்காதரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். Read more

sdfsdfஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நீக்கப்பட்டுள்ளது. 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த இயத்தினால் எவ்வித தாக்குதல் அச்சுறுத்தல்களும் ஏற்படுவதற்கான ஆதாரங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்படவில்லை என ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக முடக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதியை விடுவிப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. Read more