erநல்லூரில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு அற்றுசுருத்தல் ஏற்படும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு கண்டனம் தெரிவித்து கிளிநொச்சியிலும், மலையகத்திலும் இன்று கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று முற்பகல் 10 மணியளவில் நீதிபதி இளஞ்செழியனுக்கு ஆதரவு தெரிவித்து கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட்டோரின் உறவினர்கள் ஏந்தியிருந்தனர். குறிப்பிட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக நீதியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதேவேளை ஹட்டன் மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றிலும் ஈடுபட்டிருந்தனர். ஹட்டன் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் முயற்சியின்போது பொலிஸ் அதிகாரி பலியானமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்றுகாலை 10 மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் ஆர்பாட்டம் இடம்பெற்றது.

யாழ் நீதிமன்ற நீதவான் இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டு தாக்குதல் சம்பவமானது நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ertertr