விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளிற்கு எதிரான குறிப்பிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகளின் கீழ் ஐரோப்பிய ஓன்றியம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. விடுதலைப்புலிகளால் தொடர்ந்தும் ஆபத்து உள்ளது என்பதை ஐரோப்பிய ஓன்றியத்தின் 28 உறுப்புநாடுகளும் ஏற்றுக்கொள்ள செய்துள்ளோம் என பிரசல்ஸிற்கான இலங்கையின் தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.