பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 11 மணியளவில் விஜேராமயில் உள்ள பிரதமரின் இல்லத்தில் வைத்து அவர் அங்கத்துவத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமருடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.