இலங்கையுடன் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் பெல்ஜியத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளின் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக 6 பேர் அடங்கிய குறித்த குழு நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த குழு சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு சீகிரிய, கண்டி, காலி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.