புதிய அரசில் மூன்று அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்-

ministerssssமங்கள் சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கமைய மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவும், விஜயதாச ராஜபக்ஷ நீதி அமைச்சராகவும், டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொள்ளும் பொருட்டே இவர்கள் பதவியேற்றதாக தெரியவருகின்றது.

விமல், தினேஷ், வாசு ஆகியோர் எதிர்க்கட்சி-

udayaபொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்ற விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார உட்பட்ட பலர், எதிர்க்கட்சியில் இருப்பதற்கு ஏற்கெனவே முடிவெடுத்துள்ளதாக, பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பலரும் எதிர்க்கட்சியிலேயே இருப்பர் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு, தேசிய அரசாங்கத்துடன் இருப்பதா அல்லது எதிர்க்கட்சியில் இருப்பதா என்று தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஏற்கெனவே அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.