Header image alt text

berlin-2ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நத்தார் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்காடி ஒன்றில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 12 பேர் பலியானதாகவும் 45 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வரலாற்று சிறப்புமிக்க கைசர் வில்கெட் நினைவு தேவாலயம் அருகே உள்ள சந்தைத் தொகுதியில் பொதுமக்கள் உணவு பொருட்கள், மதுபானங்கள், மற்றும் இனிப்பு வகைகளை பொதுமக்கள் வாங்கி கொண்டிருந்த போதும், நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போதும், அங்கு வேகமாக பயணித்த லொறி ஒன்று மோதியதால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. Read more

sdafdதுருக்கி தலைநகர் அங்காராவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் உயிரிழந்துள்ளார். அங்காராவில் நடைபெற்ற சமகால கலை தொடர்பான கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ட்ரிவ் நேற்று சென்றிருந்தார்.

அப்போது நிகழ்ச்சியின் நடுவே திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அண்ட்ரிவ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிசார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட மர்மநபர் பலியாகியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் புகுந்து, மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.