முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளுள் ஒரு தொகுதி காணி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை கையளிப்பதற்காக ஜனாதிபதி, எதிர்வரும் ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில், இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. Read more