ddsdddsகனடா நாட்டில் வசிக்கும் ஜெயசுந்தர் கலைவாணி தமபதிகளின் 10வது திருமண ஆண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 27 சிறார்களுக்கு 30,000 ரூபா பெறுமதியான புத்தாடைகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பாரதி பெண்கள் சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது. அவர்களது விண்ணப்பதில் தெரிவித்ததாவது, தமது இல்லத்தில் 108 பெண் சிறார்கள் உள்ளதாகவும் இவர்கள் யாவரும் யுத்த வடுக்களை தமது உள்ளத்தில் சுமந்து வரும் இவர்கள் எதிர்வரும் சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமது இல்ல சிறார்களுக்கான புத்தடைகளை அன்பளிப்பாக வழங்கி வைக்குமாறு கேட்டுள்ளதுடன் அவர்களும் எல்லோரையும் போன்று எதிர்வரும் சித்தரை தமிழ் புத்தண்டை புத்தாடைகளை அணிந்து மன மகிழ்வுடன் கொண்டாடுவதற்கு தங்களின் அமைப்பின்னுடாக 108 பெண் சிறார்களுக்கும் புத்தாடைகளை வழங்கிவைக்குமாறு கேட்டுள்ளனர்.

இதற்கு அமைவாக நேற்று தமது 10வது திருமண ஆண்டு நிறைவை கொண்டாடும் இவ் நல்லுள்ளங்கள் 27 சிறார்களுக்கான 30,000 ரூபா பெறுமதியான புத்தாடைகளை வழங்கி வைத்துள்ளார்கள். இக் கைங்கரியத்தை ஆற்றியுள்ள ஜெயசுந்தர் கலைவாணி தம்பதிகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை கூறிக்கொள்ளும் தருணம் இவர்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)