Header image alt text

lankan in canadaபுலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து இலங்கைத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட உள்ளார். மாணிக்கவாசகம் சுரேஸ் என்ற இளைஞரே இவ்வாறு நாடுகடத்தப்பட உள்ளார்.

குறித்த நபர் புலிகளுக்காக நிதி சேகரித்தார் எனவும் தன்னார்வமாகவே புலிகள் அமைப்பில் ஈடுபட்டிருந்தார் என்றும் கனடாவின் குடிவரவு சபை ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தியிருந்தது. இவ்வாறான குற்றச்சாட்டுக்காக வழக்கு தொடரப்பட்டு இவரை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து கடந்த 2 தசாப்தங்களாக அவர் நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடி வந்தார். எனினும் அவரை நாடு கடத்துமாறு கனடாவின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

vavuniyaவவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் இன்றையதினம் மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்தின் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் 195 மில்லியன் ரூபா பெறுமதியில் கட்டப்பட்டு, நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுவதற்கு வடமாகாண போக்குவரத்து அமைச்சு மற்றும் மத்திய போக்குவரத்து அமைச்சினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. Read more

train strikeசம்பளம் குறித்த கோரிக்கையினை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்படவுள்ளன. இதன்கீழ் ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் குறித்த அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

malayaam pongal 00தேசிய பொங்கல் விழா இன்று நுவரெலியா சினிசிட்டா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

அவருடன், இந்து கலாச்சார சிறைச்சாலைகள் புனரமைப்பு மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன், புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், Read more

vavuniya Forestவவுனியாவில் நேற்றுமுன்தினம் (13) இரவு 10.30 மணியளவில் கைக்குண்டு, இடியன் துப்பாக்கி என்பனவற்றுடன் காட்டில் வசித்து வந்த கணவன் மனைவி ஆகிய இருவரையும் ஓமந்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், Read more

thipaதனது ‘மக்கள் நலப் பணி’ குறித்த விரிவான அறிவிப்பை தான் நாளை திங்கள்கிழமை வெளியிடவுள்ளதாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, ஜெயலலிதாவின் சகோதரர் மகளான தீபா புதிய அரசியல் கட்சியை தொடங்க வேண்டுமென வலியுறுத்தி அவரது வீட்டின் முன்பாக சில அதிமுக தொண்டர்களும், ஆதரவாளர்களும் திரண்ட வண்ணமுள்ளனர். Read more

vayalநாட்டில் தற்போது அதிகாலை வேளையில் நிலவும் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பினனர் குறைவடையும் சாத்தியமுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.பிரேமலால் தெரிவித்தார். 

தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிருடன் கூடிய காலநிலையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர். ஏனெனில் தற்போது இந்தியாவூடாகச் செல்லும் காற்றே இலங்கைக்கும் கிடைக்கிறது. அக்காற்று குளிருடன் கூடிய உலர்காற்றாகும். Read more

batti 01தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத்தே வாக்குகேட்டது.
ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றே நாங்கள் கேட்கின்றோம்.

அதனையே தமிழ் மக்கள் பேரவையும் கோருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். Read more

sambanthan-dineshபுதிய பிரிவினைவாத அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்பதை சகலரும் அறிவர். இருப்பினும் எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மாத்திரம் அதனை அறியாதுள்ளார். அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகள் என்றும் நிறைவேறப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் தலைவருமான தினேஸ் குணவர்தன  தெரிவித்தார். Read more

uraniயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில், அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள ,  ஊறணி கடற்பிரதேசம்,  இடம்பெயர்ந்துள்ள மக்கள் கடற்தொழிலில் ஈடுபடுவதற்காக இன்று பொங்கல் தினத்தன்று ராணுவத்தினாரல் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நல்லிணக்க வாரத்தையொட்டி, இந்த நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. Read more