arrestகனடா டொரன்டோ பகுதியில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். 30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர் வரையில் (இலங்கை மதிப்பில் ரூ.12,09,360,000) மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மோசடி குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.