fsமுல்லைத்தீவு மூங்கிலாறு தேக்கங்காட்டு பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் சிவில் அலுவலகம் ஒன்று அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின் பின்னர் விசுவமடு உடையார்கட்டு புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் பொதுமக்கள் மீள்குடியேற்றப்பட்டபோது பொதுமக்களின் சிவில் சந்திப்புக்காக இந்த தேக்கங்காட்டு இராணுவ அலுவலகம் திறக்கப்பட்டது. எனினும் பொதுமக்கள் அந்த அலுவலகத்திற்குச் சென்று தமது தேவைகளை பெற்றுக் கொள்ளுதல் மிகக்குறைவாகவே காணப்பட்டதாக கூறப்படுகின்றது.பின்னர் தென்னிலங்கையில் இருந்து முல்லைத்தீவுக்கு செல்லும் சிங்கள மக்கள் குறித்த அலுவலகத்தை ஓய்வு இடமாக பயன்படுத்தியிருந்தனர். இந்நிலையில் குறித்த அலுவலகம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.