ss (2)கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கிடுகினால் வேயப்பட்ட தற்காலிக கொட்டகை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

பிரதேச மக்கள் மற்றும் பொலிசார் இணைந்து பிரதேச சபையின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். இருப்பினும், மின்னிணைப்புக்களற்ற வகுப்பறைத் தொகுதி எப்படி எரிந்தது? என்று இன்னமும் அறியப்படவில்லை. எவ்வாறாயினும், கிளிநொச்சியில் ஒரு தீயணைக்கும் கருவி இல்லாமையினாலே கிளிநொச்சியில் தீ விபத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முடியவில்லை என கல்வியியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.