Header image alt text

sdfdsfயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மக்கள் மல்லாகம் பழம்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரியும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், வடக்கு பகுதியிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sfdகோப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 26ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மக்களின் போராட்டமானது இன்றுடன் 26ஆவது நாளை எட்டியுள்ளது. வீதியோரத்தில் வெயில் கொட்டும் பனிகளையெல்லாம் தாண்டி சொந்தமண்ணில் கால்பதிக்க வேண்டும் என்ற பேராசையுடன் தொடர்கின்றது இவர்களின் அறவழிப் போராட்டம். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு விடுக்கப்பட்ட அறிவித்தலின் மூலம் தாமாக திரண்ட இளஞர் கூட்டம் கோப்பாபுலவு மக்களின் போராட்ட களத்துக்கு சென்று மக்களுக்கு ஆதரவாக இன்றிலிருந்து கோப்பாபுலவில் தங்கியிருந்து போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். Read more

sdfdsfsdfஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களால் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் தொடர்பில் தனது முகநூல் ஊடாக வசைபாடுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைரத்தை பெற்ற தியாகராசாவே ஏன் இந்த வைரஸை பெற்றாய், கொள்ளைக்காரனே உனக்கு பேஸ்புக் எதற்கு?, துவாரகேஸ்வரனின் பேஸ்புக்கை தடை செய் போன்ற பதாகைகளை தாங்கியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர். யாழ்.பண்ணை சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ் பொதுநூலக வீதி வழியாக வந்து மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது. 
Read more

sdffsdsஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்றையதினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வந்துள்ளனர்.

குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவினர், நேற்றுக்காலை கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். Read more

genevaஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற “பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை ஒழிப்பதற்கான ஐ.நா. குழுவின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து சென்ற அரச சார்பற்ற அமைப்பின் பிரதிநிதிகள் இருவர், இலங்கை இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பலவற்றை இக்குழு முன்னிலையில் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. வன்னி இறுதிக் கட்டப் போராட்டத்தின்போது வடக்கு பெண்கள்மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் வடக்கிலிருந்து இராணுவம் நீக்கப்படாதுள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவிடம் ஐ.நா. குழு கேள்வி எழுப்பிளதாகவும் ஜெனீவா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Read more

ssகிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும் அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜ.நா. கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். Read more

maithriரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் ரஷ்யாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்தின்போது இலங்கைக்கு நன்மை ஏற்படக்கூடிய சில முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் டொக்டர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன. அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழ்கின்றது எனவும், ஏனைய சிறுபோக உற்பத்திகளும் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ரஷ்ய விஜயத்தின் ஊடாக உச்ச அளவில் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் முனைப்புக்கள் எடுக்கப்பட்டு வருவதாக தூதுவர் சமன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

dfgகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பரவிப்பாஞ்சான் மக்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது. அதன்போது, மக்களின் காணிகளை பிரதேச செயலாளர் அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் வெளியேறுவதாக இராணுவத்தினர் உறுதியளித்திருந்தனர். Read more

bavanகௌரவ முதலமைச்சர்,
வடக்கு மாகாணசபை
கைதடி, யாழ்ப்பாணம்

20.02.2017
கனம் ஐயா,
தொடர்ச்சியாக வடமாகாணத்தின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றியும், அவற்றை நிவர்த்திசெய்யக் கூடிய நடைமுறைச் சாத்தியமான, யாழ் மாவட்டம் தவிர்ந்த, ஏனைய பின்தங்கிய மாவட்டங்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் பற்றியும், நாம் பல தடவைகள் பல நிர்வாக, அரசியல் தலைமை மட்டங்களிலும் வலியுறுத்தி வந்த போதிலும் அவை செவிடன் காதில் சங்கு ஊதுவது போலவே அமைகின்றது.

அண்மையில் வட மாகாண ஆசிரிய சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக நடாத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் பற்றி நிறையவே சந்தேகங்கள் பல மட்டத்திலும் ஏற்றபட்ட வண்ணமேயுள்ளது. Read more

SFDFDகாணாமற் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் ஈடுபட்டுள்ளனர். அரசியல்வாதிகளால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பொய்யாகியுள்ள நிலையில் தாம் இனியும் ஏமாற தயாரில்லை என்று மூன்றம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமற் போனோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற வழிபாடுகளை அடுத்து நகர் வீதிவழியாக ஊர்வலமாக வருகை தந்து வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read more