இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஸாந்த சில்வா, ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு பாதுகாப்பு படையணிகளின் பிரதானி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுதம் தாங்கிய படையணிகளின் சேனாதிபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017ஆம் ஆண்டு ஜீன் மாதம் 27ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த ஜெனரல் பதவி உயர் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.