Header image alt text

Anna (21)வட மாகாண சபையில் அண்மையில் நிலவிய கொதிநிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பலரின் வாய்க்கு அவலாக அமைந்திருந்தது. எக்காரணம் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினை அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சிக்கும், வட மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சமரச முயற்சிகள் பற்றியும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உடைவு தவிர்க்கப்பட்டது பற்றியும் தினகரன் வாரமஞ்சரிக்கு மனம் திறக்கின்றார்…. -(வாசுகி சிவகுமார்)-

வட மாகாண முதலமைச்சரின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம், அவரைப் பதவி விலக்குவது தொடர்பாக வடக்கில் இருந்த கொதிநிலை சற்றே தனித்திருக்கின்றது. தற்போதைய சுமுக நிலை ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தவர்களில் நீங்களும் ஒருவர். வடமாகாண சபையில் மீண்டும் இயல்புநிலை தோன்றிவிட்டதா?

இப்போதைக்கு முதலமைச்சரின் மீது என்ன காரணத்துக்காக நம்பிக்கையில்லாhத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதோ, அது தீர்க்கப்பட்டு விட்டது. தமிழரசுக்கட்சி அதன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை வாபஸ் பெற்றுவிட்டது. விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய குற்றம் சாட்டப்பட்;டவர்களை விலக்கி குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை நிபந்தனையின்றி தொடர்ந்தும் பதவியில் நீடிக்கச் செய்வது தொடர்பில் சிக்கல்கள் தற்போது இல்லை. ஏனைய இரு அமைச்சர்கள் மீதும் விசாரணைகளை நீடிப்பதா இல்லாயாவென்பது மற்றொன்று. அது முதலமைச்சர் விரும்பினால் தொடரப்படக்கூடியது. Read more

ewrwerகிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை அமைக்குமாறு மக்கள் மாவட்ட செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 1983ம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்கென இக் கிராமம் உருவாக்கப்பட்டது.

அவசரமாக உருவாக்கப்பட்ட இக் கிராமத்தில் தாழ்நிலப் பகுதிகளை நோக்கி மழை காலத்தில் காட்டாறு வெள்ளம் கிராமம் முழுவதிலும் பரவுவதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். மேலும், இக் கிராமத்தில் கிழக்குப் பகுதியில் தொடங்கப்படும் அணையை, ஆனைவிழுந்தான் குளத்தின் அணையுடன் இணைப்பதன் மூலம் கிராமத்திற்குள் வெள்ள நீர் பரவாது எனவும், இது தொடர்பாக கடந்த முப்பது ஆண்டுகளாக அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் வெள்ளத் தடுப்பரண் அமைக்கப்படவில்லை எனவும் மக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

australia refugeesஇலங்கையர்கள் 20 பேரை சட்டவிரோத குடியேறிகள் என்றுக்கூறி அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் படைப்பிரிவினரால் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். விசேட வானூர்தியின் மூலம் இவர்கள் நேற்று நாடு கடத்தப்பட்டனர்.

அண்மைக்காலத்தில் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்களே நாடு கடத்தப்பட்டவர்கள் என த ஒஸ்ரேலியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. எனினும் நாடு கடத்தப்பட்டவர்கள் எப்போது கடலில் வைத்து தடுக்கப்பட்டவர்கள் என்ற தகவலை அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் வெளியிடவில்லை.

postஅஞ்சல் சேவையாளர்கள் ஒன்றியம் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அஞ்சல் காரியாலயங்களை ஓய்வு விடுதிகளாக மாற்றும் செயற்திட்டத்திற்கு அனுதி வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக குறித்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12ஆம் திகதி அஞ்சல் சேவை பணியாளர்கள், 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இதுவரையில் அரச தரப்பு அதிகாரிகள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முன்வரவில்லையென அஞ்சல் பணியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.