ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கத்திற்கென விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது இதனை நடைமுறைப்படுத்துவதற்கே இந்த விசேட குழு அமைக்கப்படவுள்ளது. Read more