Header image alt text

siva[1]தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 43ஆம் வருட நினைவுதினம் இன்றாகும். அன்னாரின் நினைவுதின நிகழ்வு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபிக்கு அருகாமையில் இன்றுகாலை 9.30மணியளவில் நடைபெற்றது. 
இதன்போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அன்னாரின் உருவப்படத்திற்கும், உருவச் சிலைக்கும் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Read more

well03இன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட பிரதான வீதி வள்ளிபுனம் முகவரியாக கொண்ட வி.ரஜனிதேவி என்பவருக்கு லண்டனைச் சேர்ந்த அண்ணாமலை கிருபாகரன் (ரூபா 88 000) மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆருசன் மிருசன் ஆகிய சகோதரர்கள் (ரூபா 57 000)  தமது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய நிதியில் இருந்தும் பயனாளியின் பங்களிப்பாக 500 சீமெந்து கற்றகளுடன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ரூபா 141,000 செலவில் புதிய கிணறு கட்டப்பட்டு பயனாளியின் பாவனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. Read more